மயிலாடுதுறை, மார்ச் 12- தமிழ் இலக்கியங்களை மாணவர்கள் படித்து தெரிந்து கொள்வது அவசியம் என மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி அறி வுறுத்தினார். மயிலாடுதுறை மாவட்டம் செம்ப னார்கோவிலில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்க்கனவு சொற்பொழிவு நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்துப் பேசியதாவது: தமிழர் பண்பாடு மிகவும் தொன்மை யானது. தமிழ் மரபின் வளமை, பண்பாட் டின் செழுமை, கலை, இலக்கியம் ஆகிய வற்றை மாணவர்கள் படித்து தெரிந்து கொள்வது அவசியமாகும். அதற்காகவே தமிழ்க்கனவு நிகழ்ச்சி தமிழக அரசால் மாநிலம் முழுவதும் 100 இடங்களில் நடத் தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் தமி ழின் சிறப்புகளை மாணவ, மாணவிகள் அறிந்து கொண்டு எதிர்காலத்தில் அரசுத் துறையின் உயர்பதவிகளை அடைய முடி யும் என்றார். மாணவ, மாணவிகளுக்கு விருது நிகழ்ச்சியை முன்னிட்டு கல்லூரி வளா கத்தில் மாவட்ட நூலகத் துறை சார்பில் புத்த கக் கண்காட்சி நடந்தது. நான் முதல்வன் திட்டம், கல்விக் கடன், வங்கிக் கடன், தாட்கோ திட்டங்கள் தொடர்பான அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. இதை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். நிகழ்வில் கவிஞர் அறிவுமதி “ஏர்த் தமிழ்” என்ற தலைப்பிலும்,, கவிஞர்.நந்த லாலா “வணக்கம் வள்ளுவா” என்ற தலைப் பிலும் சொற்பொழிவாற்றினர். கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வினாக் கள் எழுப்பிய மாணவ, மாணவிகள் எட்டுப் பேருக்கு பெருமிதச் செல்வன், பெருமித செல்வி, கேள்வியின் நாயகன், கேள்வியின் நாயகி உள்ளிட்ட விருதுகள், பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வருவாய் கோட்டாட்சியர்கள் யுரேகா, அர்ச்சனா, கல்லூரி நிர்வாக இயக்குனர் குடியரசு, தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.