கும்பகோணம், ஏப்.6 - கும்பகோணம் அருகே உள்ள கோவில் ஆச்சேரி அன்னை கலை மற்றும் அறி வியல் கல்லூரியில் 17 ஆவது பட்டமளிப்பு விழா நடை பெற்றது. விழாவிற்கு அன்னை கல்வி குழும தாளாளர் மு.இ. அப்துல் கபூர், தலைவர் அன்வர் கபீர் ஆகியோர் தலைமை வகித்த னர். அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மாணிக்கவாசுகி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பி னர், புதுக்கோட்டை மன்னர் கல்லூரி கலைக் கல்லூரி யின் முதல்வர் முனைவர் செல்வம், பாரதிதாசன் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வருமான எஸ்.சேகர் ஆகியோரும், மாணவர்களின் பெற்றோர்க ளும் முதலிடம் பிடித்த மாண வர்களுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். இதில் 975-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்ற னர்