districts

img

20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஆக.21  20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் புதுக்கோட்டையில் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுக்கோட்டை மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் அலுவல கம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரி யர்கழக மாவட்டத் தலைவர் க. ஜெயராம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் குரு.மாரிமுத்து, க.வியாஸ்,  ஆ.மதலைமுத்து ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். சுரேஷ்  பேசினார். ஆர்ப்பாட் டத்தை தொடங்கி வைத்து மாநில துணைப் பொதுச் செயலாளர் மா.குமரேசன் உரையாற்றினார். மாநில மகளிர் அணிச் செயலாளர் து.வாசுகி நிறைவுரையாற்றினார். தோழமைச் சங்க நிர்வாகிகள் ்ஆர்.ரெங்கசாமி, வெ.தன்ராஜ், த.ஜீவன்ராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டப்பொருளாளர் எஸ்.ராஜா நன்றி கூறினார். தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதிப்படி ஆசிரியர்களுக் கும், அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட உயர்கல்வி ஊக்க ஊதியத் திட்டத்தை மீண்டும் வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து அதற்கான ஊதியத்தை பெறும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பனஉள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு உயர்நிலை-மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் சங்கத்தின் மாவட்டத் தலைவர் த.ஆதீஸ்வரன் தலை மையில் செவ்வாயன்று நடைபெற் றது. மாவட்ட துணைத்தலைவர் எஸ்.ஜெயக்குமார், மாவட்ட இணைச் செயலாளர் கோ.இரவி, நா.மஞ்சுளா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  மாநிலச் செயலாளர் நா. அசோக்குமார், எம்.இளங்கோ,  கே.முருகன் , ஆர்.தாயுமானவன், க.செல்வம் உள்ளிட்ட சங்க நிர்வா கிகள் உரையாற்றினர். போராட் டத்தை வாழ்த்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் து.இளவரசன் உரையாற்றி னார்.பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமா னோர் கலந்துகொண்டனர்.