தஞ்சாவூர், மே 26-
மீன்பிடி தடைக்காலத் தில் விசைப்படகுகளை மராமத்து செய்ய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்பிடித் தடைக்காலத் தில் 61 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் ஒரே இடத்தில் தங்களது விசைப்படகுகளை நிறுத்தி வைப்பதால் முழுமையாக மராமத்துப் பணிகள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. சாதாரணமாக ஒரு விசைப்படகை கரையில் ஏற்றி சுத்தம் செய்து சிறிய அளவில் மராமத்துப் பணிகள் செய்து வர்ணம் பூச ரூ.4 லட்சம் வரை செலவா கிறது. தற்போது தடைக்காலம் என்பதால் முழுமையாக விசைப்படகுகளை மராமத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு விசைப்படகை முழுமை யாக மராமத்து செய்ய ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை தேவைப்படுகிறது. நலிந்து வரும் மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்க மீன்பிடித் தடைக்காலங்க ளில் விசைப்படகுகளை மரா மத்து பணி செய்ய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும். அப்போது தான் மீனவர் களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும் என்கின்ற னர் மீனவர்கள்.