தஞ்சாவூர், ஜூன் 18 -
தஞ்சாவூர் மாவட்டத்தில் புல்வெட்டும் கருவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவினத்தில் 65 முதல் 70 விழுக்காடு தீவனத் திற்காகவே செலவாகிறது. தீவன தேவை மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது.
எனவே தீவன பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப் படுத்தும் வகையிலும் தமிழக அரசு கடந்த பத்தாண் டுகளாக மாநில தீவன அபிவிருத்தித் திட்டத் தைச் செயல்படுத்தி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடை பரா மரிப்புத்துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசு மானியத்துடன் கூடிய மாநில தீவன அபி விருத்தி திட்டத்தின் கீழ் மின்சாரம் மூலம் இயங் கும் புல்வெட்டும் கருவிகள் 30 எண்ணிக்கை 50 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படஉள்ளது.
பயனாளிகள் தேர்வின்போது இதர கிராம பயனாளிகளுடன் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட பயனா ளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் பயனாளி குறைந்தபட்சம் இரண்டு கால்நடைகள் வைத்திருக்க வேண்டும்.
ஒரு புல் நறுக்கும் கருவிக்கு 50 விழுக்காடு மானியம் வழங்கப்படும் (புல்நறுக்கும் கருவியின் மொத்த தொகை ரூ.32 ஆயிரம் ஆகும்) அரசால் மானியமாக ரூ.16 ஆயிரம் நிறுவனத்திற்கு வழங்கப்படும். மீதமுள்ள ரூ.16 ஆயிரத்தை (ஜி.எஸ்.டி., உள்பட) பயனாளிகளின் பங்களிப்பு தொகையாக வழங்கிட விருப்பம் உள்ளவராக இருத்தல் அவசியம்.
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பய னாளி, இதற்கு முன் இது போன்று மானியத்தில் புல் வெட்டும் கருவிகள் பெற்றிருத்தல் கூடாது. விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இதில் பயனடைய விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை மருந்தக, உதவி மருத்துவரை அணுகலாம் கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்குறையை போக்க தீவன அபி விருத்தி திட்டத்தை கால்நடை பராமரிப்புத்துறை செயல்படுத்தி உள்ளது.
100 ஏக்கரில் கால்நடை வளர்ப்போர் பயன் பெறும் வகையில் நீர்ப்பாசன வசதி கொண்ட மர பழத்தோட்டத்தில் அரை ஏக்கர் முதல் 1 ஏக்கர் பரப்பளவில் பல்லாண்டு தீவன பயிர் களை ஊடுபயிராக பயிரிட்டு 3 ஆண்டுகாலம் வரை பராமரிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் மானியமாக வழங்கும் திட்டமும் செயல்படுத்தப் பட உள்ளது. 30-ஆம்தேதி கடைசி நாளாகும்.
இந்தத் திட்டத்திற்கான மொத்த பயனாளி களில் குறைந்தபட்சம் 30 விழுக்காடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த பய னாளிகளாக தேர்வு செய்யப்படுவார்கள். எனவே தகுதி வாய்ந்தவர்கள் வருகிற 30-ஆம் தேதிக் குள் அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பிக்கலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.