திருச்சிராப்பள்ளி, ஜூன் 30 -
திருச்சி சேதுராப்பட்டி யில் உள்ள ஸ்ரீரங்கம் அரசி னர் பாலிடெக்னிக் கல்லூரி யில் 2023-2024 ஆம் கல்வி யாண்டில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.
டிப்ளமோ முதலா மாண்டு மற்றும் நேரடி இரண் டாம் ஆண்டு ஆகியவற்றில் சேர விரும்பும் மாணவர்கள் கல்லூரிக்கு நேரில் வந்து ரூ.150 செலுத்தி விண்ணப் பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. இந்த பாலிடெக்னிக் கல்லூரியில் டிசிஇ-சிவில், டிஎம்இ-மெக்கானிக்கல், எலக்ட்ரிக் கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிக்கேசன், டிஎஸ்சி இ-கம்ப்யூட்டர் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
ஆண்டு ஒன்றுக்கு ரூ.2,192 மட்டுமே கட்டண மாக செலுத்த வேண்டும். முத லாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப் போர் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண் டும். நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஐடிஐ அல்லது 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும்.
மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக 82482 52577, 80122 80437, 94424 31190, 80726 00082, 81229 88953, 90429 20369 என்ற தொலை பேசி எண்களை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங் களை பெற்றுக் கொள்ள லாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரி வித்துள்ளார்.