திருச்சிராப்பள்ளி, ஜூன் 29-
திருச்சிராப்பள்ளி மாவட்டம், தில்லை நகர், அரசு வணிக வளாகத்தில் புதிய சார் பதிவாளர் அலுவலகதை நகராட்சி நிர்வா கத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் வியாழனன்று திறந்து வைத்த னர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன்,அரசு அலுவலர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.
இந்த சார்பதிவாளர் அலுவலக கட்டுப் பாட்டின் கீழ், திருச்சிராப்பள்ளி, செங்குளம், வரகனேரி, புத்தூர், பாண்டமங்கலம், உய் யக்கொண்டான் திருமலை மற்றும் திருச்சி மாநகராட்சியை உள்ளடக்கிய 12 வார்டு கள் அடங்கும்.
அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ பத்திரப்பதிவு துறையில் கடந்தாண்டை காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக ரூ.8 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. பத்திரப்பதிவு துறைக்கு அரசு ரூ.25 ஆயிரம் கோடி வருவாய் இலக்கு நிர்ணயித்துள்ளது. வருவாய் இலக்கை அடைவதற்கு ஏதுவாக, அதிகாரிகள் பணி யாற்றவேண்டியுள்ளது.
பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் இடை யூறு இல்லாமல் பணியாற்ற வசதியாக, இடைத்தரகர்கள், ஆவண எழுத்தர்கள் யாரும் அலுவலகத்திற்குள் வரக்கூடாது என உத்தரவிட்டப்பட்டுள்ளது என்றார்.