பெரம்பலூர், நவ.14 - மின்சார வாரியத்தை தனியார் வசம் ஒப்படைக்கும், ஒன்றிய அரசின் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். இத்திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் நுகர் வோர் சார்பில் மனு அளிக்கும் இயக்கம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, செவ்வா யன்று பெரம்பலூர் நான்கு ரோடு மின்வாரிய கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மின் நுகர் வோர் குறைதீர் கூட்டத்தில், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் ஒன்றியச் செயலாளர் எம்.கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளிக்கப்பட்டது. ஒன்றியச் செயலாளர்கள் குன்னம் செல்லமுத்து, ஆலத்தூர் செல்லதுரை மற்றும் பி.கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என். செல்லதுரை எஸ்.அகஸ்டின், ஏ.கே. ராஜேந்திரன், அ.கலையரசி, ரெங்க நாதன் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். பின்னர் அளிக்கப்பட்ட மனுவில், இலவச மின்சாரம், மானியங்கள் இவற்றை காவு கொடுப்பதற்காகவும் மின் நுகர்வோரை கடும் சிரமத்திற்கு உள்ளாக்கி, தனியார் பெரு நிறுவ னங்கள் கொள்ளையடிப்பதற்கும் ஒன்றிய அரசால் வழிவகை செய்துள்ள இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். மின் நுகர்வோருக்கும் மின்சார வாரி யத்திற்கும் பெரும் சுமைகளை ஏற்படுத் தும் இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்தவே கூடாது” என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.