பேராவூரணி, ஏப்.22-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள படப்பனார்வயல் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி யில் ஆண்டுத் திருவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலர் அ.கலா ராணி தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் அங்கயற்கண்ணி, வட்டார வள மைய மேற்பார்வையா ளர் (பொ) அ.முருகேசன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ம.பூங்குழலி ஆகி யோர் முன்னிலை வகித்த னர். தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் வரவேற் றார்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சசிகலா ரவிசங்கர் பரிசு களை வழங்கினார். இதில், பள்ளி முன்னாள் மாணவர் கள் சங்கம் சார்பில் மாண வர்கள் பயன்பாட்டிற்கான ரூ.20 ஆயிரம் மதிப்பிலான கணினி வழங்கப்பட்டது.