கரூர், ஜூலை 30-
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்டச் செயலாளர் கெ.சக்திவேல், தமிழ் நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.சுரேஷ்குமார் ஆகியோரது பணி நிறைவு பாராட்டு விழா கரூரில் நடைபெற்றது.
நிகழ்விற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் பொன்ஜெயராம் தலைமை வகித்தார். மாவட்டத் தணிக்கை யாளர் கே.செல்லமுத்து வரவேற்றார். திண்டுக்கல் சட்டமன்ற முன்னாள் உறுப்பி னர் கே.பாலபாரதி சிறப்புரையாற்றினார்.
சிஐடியு சங்க கரூர் மாவட்டத் தலை வர் ஜி.ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர்கள் மொ. ஞானத்தம்பி, எம்.செல்வராணி, மாநிலத் தணிக்கையாளர் முபாரக் அலி, அனைத்து மருந்தாளுனர் சங்க மாநிலத் தலைவர் விஜயகுமரன், சமூக ஆர்வலர் எஸ்.பாலா, மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு, எம். சுப்பிரமணியன், பாலமுருகன், காப்பீட்டுக் கழக தஞ்சாவூர் கோட்டத் துணைத் தலை வர் வி.கணேசன், ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் ஜ. ஜெயராஜ் உட்பட ஏராளமானோர் பங் கேற்றனர்.
பணி ஓய்வுபெற்ற கெ.சக்திவேல் மற்றும் ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் ஏற்பு ரையாற்றினர். இருவரும் சிஐடியு மாவட்ட வளர்ச்சி நிதியாக ரூ.20 ஆயிரம், நிர்மல் பள்ளி நிதி ரூ. 5 ஆயிரம் என மொத்தம் ரூ.25 ஆயிரத்தை கே.பாலபாரதியிடம் வழங்கி னர். மருந்தாளுநர் சங்க மாநிலச் செயலா ளர் இளங்கோ நன்றி கூறினார்.