தஞ்சாவூர், ஆக.14-
பழைய ஆற்காடு பகுதியில், சாலை யோர சேற்றில் சிக்கி, அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் உட்பட 53 பேர் சிறு காயங்களு டன் தப்பினர்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் இருந்து பத்தாளப்பேட்டை, இந்தளூர், மார நேரி வழியாக திருக்காட்டுப்பள்ளிக்கு வரும் அரசு நகரப் பேருந்து எண்.87டி திங்கள் கிழமை காலை சுமார் 8:15 மணிக்கு பழைய ஆற்காடு மாதா கோவில் அருகில் 75 பயணி களுடன் வந்து கொண்டிருந்தது.
அப்பகுதி சாலை ஓரத்தில் குடிநீர் குழாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு மண் நிரப்பப்பட்டிருந்தது. தொடர்ந்து பெய்த மழையினால், மண் சேறும் சகதியுமாக இருந்த நிலையில், பேருந்தின் சக்கரம் சேற்றில் சிக்கி வயலில் கவிழ்ந்தது.
இதனால், பள்ளி செல்லும் மாணவர்கள் உட்பட 53 பேர் சிறு சிறு காயங்களுடன் தப்பி னர். இதில் மாரநேரி அரசு மருத்துவமனை யில் 20 பேரும், பூதலூர் அரசு மருத்துவ மனையில் 33 பேரும் சிகிச்சை பெற்றனர். அதில் வேப்பங்குடியைச் சேர்ந்த சுபஸ்ரீ (14), கல்வி ராயன்பேட்டையைச் சேர்ந்த ராஜா (33), செம்பியன் கிளரியைச் சேர்ந்த பிரணவ் (14) மற்றும் ஒரு மூதாட்டி ஆகி யோர் மேல் சிகிச்சைக்காக, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.