districts

img

வாழ்க்கைக்கு உதவும் நல்ல நூல்களை தேடிப் படிக்க வேண்டும் வாசிப்பு இயக்க தொடக்க விழாவில் அறிவுரை

பெரம்பலூர், ஆக.26 -

      பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் வெள்ளியன்று வாசிப்பு இயக்க தொடக்க விழா நடைபெற்றது.

      பள்ளி தலைமையாசிரியர் க.செல்வ ராசு தலைமை வகித்தார். தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் பேரா. ப.செல்வகுமார்,  மாவட்டப் பொருளாளர் வ.வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாலி கண்டபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கலி யம்மாள் அய்யாக்கண்ணு பரிசளித்தார்.  

     பெரம்பலூர் மாவட்ட மக்கள் தொடர்பு  அலுவலர் க.பாவேந்தன் சிறப்புரையாற்று கையில், “மாணவர்கள் பாடநூல்களைத் தாண்டி வாழ்க்கைக்கு உதவும் நல்ல நூல்களை  தேடிப் படித்து சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அறிஞர் அண்ணா, பகத்சிங், அம்பேத்கர் ஆகியோரது வாசிப்பு பண்பினை  எடுத்துக்காட்டாக கொண்டு வாழ்வில் உயர வேண்டும்” என அறிவுரை கூறினார். மாணவி கள் பலர் நூல் மதிப்புரை ஆற்றினர்.