வெம்பக்கோட்டை, ஜூன் 25-
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல் குளத்தில் நடைபெற்று வரும் 2ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன மணி, கண்ணாடி மணிகள், சங்கு வளையல் செய்ய பயன்படும் மூலப் பொருளான சங்கு கண்டெடுக்கப்பட்டது...
வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 2ம் கட்ட அகழாய்வில் இதுவரை தங்க அணிகலன், தங்க பட்டை, சுடு மண்ணால் ஆன பொம்மை, புகைப்பிடிப்பான் கருவி, காதணி, எடைக்கல், பதக்கம், கண்ணாடி மணிகள், வணிக முத்திரை, சங்கு வளையல்கள், யானை தந்ததால் ஆன பகடை, தக்களி, செங்கல், சில்லு வட்டம் உள்ளிட்ட 2200 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது சுடு மண்ணால் ஆன மணி, கண்ணாடி மணிகள் , சங்கு வளையல் செய்ய பயன்படும் மூலப் பொருளான சங்கு கண்டெடுக்கப்பட்டது. முன் னோர்கள் அணிகலன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பது, தங்க அணிகலம், சுடுமண் மணி, கண்ணாடி மணி, சங்கு உள்ளிட்ட அணிகலன்கள் கிடைத்து வருவதன் மூலம் தெரிவதாக தொல்லியல் துறை யினர் தெரிவித்துள்ளனர்.