திருச்சிராப்பள்ளி, ஜூன் 24 - திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பெரிய கொடுந்துறை கிராமத்தில் வசிக்கும் உப்பிலியநாயக்கர் வம்சத் தின் குலதெய்வ வழிபாட்டு காட்டு கோயில் நிலம் பாஞ்சாம்பட்டி புலஎண் 195/2 மற்றும் பெரிய கொடுந்துறை நால்ரோடு தீர்த்தவாரி எடுக்கும் நல்ல கிணறு புலஎண் 229/1-ல் உள்ளது. இந்நிலத்தை காமாட்சி அம்மன், கருப்பாண்டவர் சுவாமிகளுக்கு பட்டா வழங் கக் கோரியும், பட்டா கோரிக்கை குறித்து குறைந்த பட்சம் மனுதாரரை விசாரிக் காமல், பட்டா தர மறுக்கும் முசிறி வட்டாட்சியர் நிர்வாகத் தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் மற்றும் வழி பாட்டு குடிகள் சார்பில் வெள்ளிக்கிழமை முசிறி ஆர்டிஓ அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க கிளைத்தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். கோரிக் கைகளை விளக்கி விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பழநிசாமி, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமநாதன், ஒன்றி யத் தலைவர் கதிர்வேல், ஒன்றிய செயலாளர் பெரிய சாமி, துணைத்தலைவர் ரவி, துணைச் செயலாளர் ஜெய்சங்கர், சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் டி.பி.நல்லு சாமி ஆகியோர் பேசினர். பின்னர் ஆர்டிஓ மாதவன் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை யில், 15 நாட்களுக்குள் காமாட்சி அம்மன், கருப்பாண் டவர் பெயர்களில் சான்றி தழ் வழங்கப்படும் என உறுதி யளிக்கப்பட்டது. இதை யடுத்து காத்திருப்பு போராட் டம் கைவிடப்பட்டது.