districts

img

தரங்கம்பாடி வட்டாட்சியர்  அலுவலகம் அருகே குப்பைகள் நோய் தொற்று பரவும் அபாயம்

 மயிலாடுதுறை, நவ.24-  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலையோரம் (சுனாமி நினை விடம்) குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவ தால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.  தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலையின் அருகில் பேரூராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. மேலும் தனிநபர் சிலரால் இரவு நேரங்களில் செப்டிக் டேங்க் கழிவு, மருத்துவக் கழிவு உள்ளிட்டவற்றை கொட்டி செல்வதால் அப்பகுதி முழுக்க கடும் துர்நாற் றம் வீசுகிறது. அந்த வழியாக தான் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை,  பொறையார் அரசு மருத்துவமனை, காவல்நிலையம், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பணிக்காக செல்பவர்களும், பள்ளி கல்லூரி செல்லும் மாண வர்களும் சென்று வருவதால் மூக்கை பொத்திக் கொண்டே சிரமப்பட்டு கடந்து செல்கின்றனர்.  எனவே, உடனடியாக பேரூராட்சி நிர்வாகத்தினர் நட வடிக்கை எடுத்து மாற்று இடத்தில் குப்பைகளை கொட்டு வதோடு, இப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.