நாகப்பட்டினம், மே 11 - நாகப்பட்டினம் மாவட்டம் அகரஒரத் தூர் ஊராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் பி.மகாலிங்கம் முதலாம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை அவர் பிறந்த கிராமமான அகரஒரத்தூ ரில் நடைபெற்றது. இதில் கட்சியின் அரசி யல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் உரையாற்றினார். ஒன்றுபட்ட நாகை மாவட்டத்தில் வாலிபர் சங்கத்தில் இணைந்து, கட்சியின் முன்னணி ஊழியராக இருந்து களப் போராட்டங்கள் பல நடத்தியவர் தோழர் மகாலிங்கம். இவர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். அவருடைய முதலாம் ஆண்டு நினைவு தின பொதுக் கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பேசியதாவது: ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டமானது செங்கொடி இயக்கத்தின் கோட்டையா கும். தோழர் பி.மகாலிங்கம் போன்றோர் செங்கொடி இயக்கம் காலூன்றுவதற்கு உறுதுணையாக இருந்தவர்களில் மிக முக்கியமானவர். மூன்று தலைமுறைகளைக் கடந்து நிற்கும் கம்யூனிஸ்டுகள் செங்கொடி இயக்கமானது மூன்று தலைமுறைகளை கடந்து நிற்கிறது. முதல் தலைமுறையில் பி. சீனிவாசராவ், பி.எஸ். தனுஷ்கோடி, மணலி கந்தசாமி, களப்பால் குப்பு, ஜி.வீரையன், ஏ.கே.சுப்பையா, கே.ஆர்.ஞானசம்பந்தம், போன் றோர் அளப்பரிய தியாகங்களை செய்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி, அடிமை விலங்கை உடைத்தெ றிந்து செங்கொடி இயக்கத்தை வேரூன்றச் செய்தவர்கள். அவர்களின் போராட்டமானது ஏகாதிபத்திய எதிர்ப்பின் குரலாக ஒலித்தது. நில மீட்பு போராட்டம், குத்தகை விவ சாயிகளுக்கான போராட்டம், பண்ணை அடிமை தனத்திற்கு எதிரான போராட்டம், கீழத் தஞ்சையில் நிலவி வந்த சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் என முதல் தலைமுறை கம்யூனிஸ்டுகள் போராடி வெற்றி கண்டனர். அவர்கள் எடுத்த தீர்மானத்தில் எள்ளளவும் தயக்க மின்றி கொள்கை உறுதியோடு இருந்து எளிய மக்களின் வாழ்வு சிறக்க பல கட்ட போராட்டங்களை நடத்தினர். 1940 முதல் 1970 வரை இம்மண்ணில் நிலவி வந்த சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிராக தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இணைந்து போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டனர். உதாரணத்திற்கு மயிலாடு துறை மாவட்டம், காஞ்சிவாய் கிராமம் சம்பா ராமசாமி - நல்லகண்ணு இருவர் செய்த தியாகத்தின் வீர வரலாற்றை எடுத்துக் கொள்ளலாம். கீழத்தஞ்சை மாவட்டத்தில் நிலவி வந்த பண்ணை அடிமைத்தனத்திற்கு எதிராகவும், சாதிய வன்கொடுமை களுக்கு எதிராகவும் அனைத்து தரப்பின ரும் ஒன்றாக இணைந்து செங்கொடியின் கீழ் வலுமிக்க போராட்டத்தை நடத்தி னர். இத்தகைய போராட்டத்தின் தொ டர்ச்சிதான் 1968 டிசம்பர் 25 இல் நடை பெற்ற வீரவெண்மணி. அந்த தியாகத்தின் விளைவுகளில் உருவாகி இருப்பதுதான் இரண்டாம் தலைமுறை கம்யூனிஸ்டுகள். இப்போது களத்தில் நின்று போராடிக் கொண்டிருக் கிறோம். களம் தற்போது மாறி இருக்கிறது. நவீன தாராளமய கொள்கைக்கு எதிராக வும், வகுப்பு வாதத்திற்கு எதிராகவும், முதலாளித்துவத்திற்கு எதிராகவும், கார்ப்பரேட் பெரிய நிறுவனங்களுக்கு எதி ராகவும், மக்களை சுரண்டிக் கொழுக்கும் அதிகார வர்க்கத்திற்கு எதிராகவும் இரண்டாம் தலைமுறை கம்யூனிஸ்டுகள் போராடி வருகின்றனர். மூன்றாம் தலைமுறை கம்யூனிஸ்டு கள் தற்போது வாலிபர் சங்கத்தில் இணைந்து சக்தி மிக்க போராட்டங்களை இம்மண்ணில் நிகழ்த்தி வருகின்றனர். நான்காம் தலைமுறை கம்யூனிஸ்டுகள் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கின்ற னர். எனவே செங்கொடி இயக்கமானது நான்கு தலைமுறைகளைக் கடந்து மக்க ளுக்காக போராடும் இயக்கமாக இன்றும் திகழ்ந்து வருகிறது. அத்தகைய வெற்றிக்குப் பின்னால் தோழர் பி.மகா லிங்கம் அவர்களின் உழைப்பு கட்சிக்கு உரமாக அமைந்திருக்கிறது. தோழர் பி. மகாலிங்கம் அவர்களின் மூன்று பிள்ளை களும் தற்போது வாலிபர் சங்கத்திலும் மற்றும் இயக்க பணியாற்றுவதும் பாராட்டுதலுக்குரியது. இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, மாநிலக் குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான நாகைமாலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முருகையன், ப.சுபாஷ் சந்திரபோஸ், நாகை தெற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வடி வேல், வடக்கு ஒன்றியச் செயலாளர் வி.வி. ராஜா, ஒன்றியக் குழு உறுப்பினர் லெனின் குமார், அகரஒரத்தூர் கிளைச் செய லாளர், கே.வினோத், வேர்க்குடி கிளைச் செயலாளர் டி.கல்யாணசுந்தரம், தோழர் பி.மகாலிங்கத்தின் மகன்கள் காரல் மார்க்ஸ், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பி.எம்.நன்மாறன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.