districts

img

தேர்தல் பத்திர ஊழலை மறைக்க கபட நாடகம் ஆடுகிறது பாஜக!

திருவாரூர், ஏப்.8 - தேர்தல் பத்திர ஊழலை மறைக்க பாஜக கபட நாடகம் ஆடுகிறது என திருத்துறைப்பூண்டியில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். திருவாரூர் மாவட்டம் திருத்து றைப்பூண்டியில் பி.எஸ்.ஆர் நினைவு மண்டபம் அருகே ஞாயி றன்று மாலை நடைபெற்ற இந்தியா  கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் சிபிஎம் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பங்கேற்றார். இதில், இந்தியா கூட்டணி யின் சிபிஐ வேட்பாளர் வை.செல்வ ராஜை ஆதரித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ஊழலை ஒழிப்போம் என பேசி  வந்த பரிசுத்தம் மிஸ்டர் மோடி,  தேர்தல் பத்திர ஊழல் வெளிவந்த பிறகு பதற்றமாகி அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ என சுயேட்சையாக செயல்படும் அமைப்புகளை, ஆட்சியின் ஏவல்  துறையாக மாற்றிவிட்டார். இதனைக் கொண்டு இந்தியா கூட்டணி தலை வர்களான தில்லி முதல்வர் கெஜ்ரி வால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்து தேர்தல் பத்திர ஊழலை திசை திருப்ப முயற்சிக்கிறார். குற்றவாளிகள் என தெரிந்தும், ஊழல் பத்திரம் மூலம் நன்கொடை யாக லஞ்சம் பெற்று பாஜக வாஷிங்  மிஷினில் போட்டு எடுத்து, பாஜக வில் இணைத்துக் கொள்வதும், தமிழ கத்தில் அண்ணாமலையை கொண்டு, மிஸ்டு கால் மூலம் ரவுடி களையும், கொலைகாரர்களையும் தங்கள் கட்சியில் இணைத்துக் கொண்டு கேடுகெட்ட அரசியலை செய்து வருகிறது மோடி அரசு. 20 ஆண்டுக்கு முன்பு இருந்த காங்கிரஸ் பொருளாளர் சீதாராம் கேசரி கணக்கை சரியாக காட்ட வில்லை என அற்ப காரணங்களை கூறி, காங்கிரசின் வங்கி கணக்கு களை முடக்கி வைப்பது என பதற்ற மாக செயல்படுகிறது மோடி அரசு.  உலக மகா ஊழலான தேர்தல் பத்திர  ஊழலை மறைக்க கபட நாடகம் ஆடி  வருகின்றனர் பாஜகவினர். ஆனால் மக்கள் தெளிவாக உள்ளனர். ஆட்சிக்கு வந்தவுடன் இளைஞர் களுக்கு ஆண்டுக்கு இரண்டு கோடி  பேருக்கு வேலை கொடுப்போம் என  வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த  இவர்கள், கடந்த 10 ஆண்டில் 20  கோடி இளைஞர்களுக்கு வேலை  அளித்திருக்கலாம். ஆனால் இருந்த வேலையையும் பறித்ததுதான் இவர் களது 10 ஆண்டு ஆட்சியின் சாதனை. குடியுரிமைச் சட்டத்தை ஆத ரித்து, அதிமுக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் வாக்க ளிக்காமல் இருந்திருந்தாலே குடி யுரிமை சட்டம் வந்திருக்காது. இச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த அதிமுகவை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?. மாநில உரி மைகளை பெற்றிட, ஜனநாயக கூட்டாட்சி தத்துவம் மலர்ந்திட, மோடி அரசை வீழ்த்திட நாகை நாடா ளுமன்ற வெற்றி வேட்பாளர் வை. செல்வராஜுவுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து பெருவாரி யான வெற்றியைத் தேடித் தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  பிரச்சார பொதுக் கூட்டத்தில் நாகை நாடாளுமன்ற தொகுதி செய லாளரும், நாடாளுமன்ற உறுப்பின ருமான எம்.செல்வராஜ், திமுக திருத்துறைப்பூண்டி தொகுதி பொறுப்பாளரும், திமுக தில்லி பிரதி நிதியுமான ஏ.கே.எஸ்.விஜயன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் கலந்து  கொண்டனர். திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து நன்றி கூறினார்.