districts

img

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்றுக!

புதுக்கோட்டை, மே 20-  

    மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்வா தாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வெள்ளிக் கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   புதுக்கோட்டை மின்வாரிய மேற் பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு தொழிற் சங்க புதுக்கோட்டை திட்டத் தலைவர் எஸ்.சின்னத்தம்பி தலைமை வகித்தார். திட்டச் செயலா ளர் கே.நடராஜன், பொருளாளர் ஆறு முகம், கீரனூர் கோட்டச் செயலாளர் சின்னத்தம்பி, அறந்தாங்கி  கோட்டச் செயலாளர் டி.விஜயகுமார் உள்ளிட் டோர் விளக்கிப் பேசினர்.

   தஞ்சாவூர்

     தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு), டிஎன்பிஇஓ, எம்ப்ளாயீஸ் பெடரேஷன் மற்றும் அண்ணா தொழிற்சங்கம் ஆகிய சங்கங் கள் சார்பில் தஞ்சாவூர் மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் அலுவலக வாயி லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

    ஆர்ப்பாட்டத்திற்கு, மின் ஊழியர் மத்திய அமைப்பு மாவட்டத் தலைவர்  அதிதூத மைக்கேல்ராஜ், எம்ப்ளாயீஸ்  பெடரேஷன் மாவட்டத் தலைவர் மோகன் தாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.  மத்திய அமைப்பு மாவட்ட செயலாளர் பி.காணிக்கைராஜ், கௌரவ தலைவர் து.கோவிந்தராஜூ, எமப்ளாயீஸ் பெட ரேஷன் மாவட்டச் செயலாளர் ராஜா, மண்டலச் செயலாளர்  கனகராஜ், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி பஞ்சு ராஜேந்திரன், மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் எஸ்.ராஜாராமன்,  கோட்டச் செயலாளர் ரவி மற்றும் ஓய்வு  பெற்றோர் நல அமைப்பு மாவட்ட பொரு ளாளர் காமராஜ் உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர்.

 திருச்சிராப்பள்ளி

    தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் திருச்சி தென் னூர் மின்வாரிய முதன்மை பொறியா ளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில துணைத்தலை வர் ரெங்கராஜன் தலைமை வகித்தார்.  எம்ப்ளாயீஸ் பெடரேஷன் செயலாளர் சிவசெல்வன், தலைவர் சத்யநாராய ணன், மின் ஊழியர் மத்திய அமைப்பு தலைவர் நடராஜன், செயலாளர் செல்வ ராஜ், பொருளாளர் பழனியாண்டி, டிஎன் பிஇஓ மாநில துணை செயலாளர் இருத யராஜ் ஆகியோர் விளக்கிப் பேசினர். கோட்டச் செயலாளர்கள், கோட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.