districts

img

ஜூலை 28 முதல் ஆக.6 வரை 6-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா

துக்கோட்டை, மே 19-

    6-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா வருகின்ற ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை புதுக் கோட்டையில் நடைபெறுகிறது.

   புத்தகத் திருவிழாவிற்கான அறி விப்பையும், பதாகையையும் வியாழக் கிழமையன்று மாவட்ட ஆட்சியர் கவிதா  ராமு வெளியிட்டார். மாவட்ட வருவாய்  அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் கே.கருணா கரன், புத்தகத் திருவிழா ஒருங்கிணைப் பாளர்கள் அ.மணவாளன், எம்.வீர முத்து, மு.முத்துக்குமார், டி.விமலா, மு.கீதா உளிட்டோர் பங்கேற்றனர்.  

   இதுகுறித்து ஆட்சியர் கூறுகை யில், ‘‘தமிழ்நாட்டின் முக்கியமான புத்தகத் திருவிழாக்களில் ஒன்றாக  புதுக்கோட்டை புத்தகத் திருவிழா விளங் குகிறது. 6-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் 100 அரங்கு களில் லட்சக்கணக்கான புத்தகங்களு டன் வாசகர்களின் பார்வைக்காக வைக் கப்பட உள்ளன.

  அரங்குகளில் கீழடி  உள்ளிட்ட தொல்லியல் கண்காட்சி களும் இடம்பெற உள்ளன. தினமும் காலையில் மாணவர்களை அழைத்து வருவதற்காக பள்ளிக் கல்வித்துறை மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக் கான கோளரங்கம், எளிய அறிவியல்  நிகழ்ச்சிகள், விஞ்ஞானிகளுடன் உரை யாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள்

   மாலையில், பள்ளி, கல்லூரி மாணவ,  மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், இலக்கிய ஆளுமைகள், கல்வியாளர் கள், அரசு உயர் அதிகாரிகள், அறிவிய லாளர்களின் உரைவீச்சுகள் நடை பெறுகின்றன. படைப்பாளிகளுக்கான இலக்கிய விருதுகளும், வாசகர் களுக்கான சிறப்புப் பரிசுகளும் வழங்கப் பட உள்ளன.

   மாணவர்கள், பொதுமக்களிடம் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத் துவது, புத்தக விற்பனையை அதிகரிப் பது, அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது உள்ளிட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு புத்தகத் திருவிழா நடைபெறுகிறது என தெரி வித்துள்ளார்.