districts

குரூப்-2, 2-ஏ முதன்மை தேர்வுக்கு தஞ்சை வேலைவாய்ப்பு மையத்தில் இன்று முதல் இலவச பயிற்சி வகுப்பு

தஞ்சாவூர், அக்.6 -  தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மை யத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஎன்யுஎஸ்ஆர்பி போன்ற போட்டித் தேர்வு களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.  இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் போட்டித்  தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் அதிகளவில் பங்கேற்று பயனடைந்து வரு கின்றனர். தற்போது தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப் பட்டுள்ள, தொகுதி 2 மற்றும் 2-ஏ தேர்விற்கு 2,327 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 14.9.2024 அன்று  நடைபெற்றது. இதற்கான முதன்மைத் தேர்வு  டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இத்தேர்விற்குத் தயாராகி வரும் போட்டித் தேர்வாளர்கள் பயன்பெறும் வகை யில், கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்  தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில்  7.10.2024 (திங்கள்) முதல் தொடங்கப்பட வுள்ளது. இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 மணி முதல்  1.30 மணி வரை நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் டி.என்.பி.எஸ்.சி  தொகுதி II & II-A முதல்நிலைத் தேர்விற்கான  தேர்வுகூட அனுமதி சீட்டின் நகல் (Hall Ticket), இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப் படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய வற்றுடன் தஞ்சாவூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்  மையத்தினை நேரில் தொடர்பு கொள்ள லாம்.  மேலும், விவரங்களுக்கு 04362-237037 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.