தென்காசி, ஆக. 6
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அன்று தில்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் தென்காசி ரயில் நிலையத்தின் மறு வடிவமைப்பு பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
தென்காசி ரயில் நிலை யத்தில் நடைபெற்ற விழா வில், நாடாளுமன்ற உறுப்பி னர் தனுஷ் குமார் ,சட்ட மன்ற உறுப்பினர் பழனி நாடார், தென்காசி நகராட்சி தலைவர் ஆர்.சாதிர் பேசி னர்.
தென்னக ரயில்வேயில், தமிழகத்தில் 18 ரயில் நிலையங்கள், கேரளாவில் 6 ரயில் நிலையங்கள், கர்நாட காவில் ஒரு ரயில் நிலையம் என மொத்தம் 25 ரயில் நிலை யங்களில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தென்காசி ரயில் நிலைய அபிவிருத்திக்கு ஒதுக்கப் பட்ட ரூ.7.08 கோடியில் நிலை யத்தின் இரண்டாவது நுழை வாயிலை அபிவிருத்தி செய்தல், இரண்டாவது நுழைவாயிலில் புதிய நிலை யக் கட்டிடத்தை நிர்மாணித் தல், அணுகு சாலைகளை மேம்படுத்துதல், சுற்றோட் டப் பகுதியை மேம்படுத்து தல், காம்பவுண்ட் சுவர்களை புனரமைத்தல், நிலத்தோற்ற முகப்பு, பயணிகள் தொ டர்பு பகுதியின் உட்புற புதுப் பித்தல் ஆகியவை அடங்கும்.