districts

img

மழையால் வீட்டை இழந்த மூதாட்டிக்கு முன்னாள் எம்எல்ஏ நிதியுதவி

தஞ்சாவூர், செப்.22 -  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குருவிக்கரம்பை ஊராட்சி முனுமாக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பெரமன். இவரது மனைவி ராஜம்மாள் (73) இவ ருக்கு கணவர், குழந்தைகள் இல்லை. தனியாக வசித்து  வந்தார்.  ராஜம்மாள் சிறிய ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், பேராவூரணி பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதில், அவரது, ஓட்டு வீடு திடீரென சரிந்து விழுந்தது. இதில் நல் வாய்ப்பாக ராஜம்மாள் உயிர் தப்பினார்.  இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு சார்பில், அவரது  மகனும் அதிமுக பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலா ளருமான கோவி.இளங்கோவன், பாதிக்கப்பட்ட மூதாட்டி  ராஜம்மாளை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து ரூ.5  ஆயிரம் ரொக்கப் பணம், அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை வழங்கினார்.