தொடர் முழக்கப் போராட்டம்
திருச்சிராப்பள்ளி, ஏப்.22-
திருச்சி நாகப்பா நிறுவனத்தின் முழு வியாபாரத்தையும், விசாலா, எல்.ஆர். நிறுவனங்களுக்கு மாற்றி விட்டு, நாகப்பா கார்ப்பரேஷனில் பணிபுரிந்த பல ஊழியர்களை, விசாலா, எல்.ஆர். நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்ட நிலையில் லோடுமேன்களுக்கு மட்டும் வேலை உத்தரவாதம் தராதது, மேலப்புலிவார் ரோட்டில் உள்ள ஒவ்வொரு கடையாய் மூடிவிட்டு, குடோன்களை காலிசெய்து விட்டு, லோடுமேன்களை வேலை இல்லாமல் செய்யும் நிர்வாகத்தின் முயற்சியை கண்டித்தும் விசாலா ஏஜென்சீஸ்ஸில் வேலை தரவேண்டும் என்ற தொழிலாளர் துறை அதிகாரியின் உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தியும் நாகப்பா சுமைப்பணி தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் சனிக்கிழமையன்று பழைய பாஸ்போர்ட் அலுவலகத்தின் எதிர்புறம் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு சுமைப்பணி சங்க மாவட்டச் செயலாளர் சிவகுமார் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், நிர்வாகிகள் ரமேஷ், மணிமாறன், சின்னதுரை, பிரபு, குட்செட் சேகர், சிபிஎம் பகுதி செயலாளர் லெனின் ஆகியோர் விளக்கிப் பேசினர்.
இதில் சுமைப்பணி தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.