திருச்சிராப்பள்ளி, ஜூலை 31-
திருச்சி மேல சிந்தாமணியில் பாதாளச் சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழி யால், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவி பலியானதற்கு மாநகராட்சியின் மெத்தன போக்கே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘திருச்சி மேல சிந்தாமணியில் வசித்து வருபவர் அழ கப்பன். இவர் சுமைதூக்கும் தொழிலாளி. இவரது மகள் ஜெகஜோதி. சத்திரம் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் திங்களன்று காலை அவரது சகோதரரின் இரண்டு சக்கர வாக னத்தில் வழக்கம் போல் வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும் போது, சிந்தாமணி பஜார் வெனிஸ் தெரு அருகில் சாலையில் தோண்டப்பட்டுள்ள பாதாளச் சாக்கடை யின் குழியால் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில், பின்னால் வேக மாக வந்த தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி மாணவி சம்பவ இடத்திலேயே பலி யானார். அவரது சகோதரர் காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த விபத்தும் உயிர் பலியும் முழுக்க முழுக்க பாதாள சாக்கடை பணிகளுக்கு தோண்டப்பட்ட குழிகளாலும், போதுமான தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் வைக்கா மலும், குழிகளை தோண்டி பல மாதங்க ளாகியும் குடிநீர் குழாய் பதிக்கும் வரை மூடப்படாமலும், சாலை அமைக்காமலும் இருப்பதால் நடந்ததே ஆகும்.
தொடர்ந்து இது போல் மாநகரம் முழுவதும் இரண்டு சக்கர வாகன ஓட்டி கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பதிக்கும் பணி கள் நடக்கும் போது போதிய தடுப்புகள் வைப்பது, எச்சரிக்கை பலகை வைப்பது, போக்குவரத்தை வேறு பகுதிக்கு மாற்றி விடு வது, காவல் துறையை வைத்து ஒழுங்கு படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மாநகராட்சியும், காவல் துறையும் கண்கா ணிப்பது இல்லை.
மேலும் முக்கிய சாலைகளில் பணி களை துவக்கினால் அதை விரைந்து முடிப்பது என்பது இல்லாமல் ஆண்டு கணக்கில் அதை இழுத்தடிப்பது போன்ற நடவடிக்கைகளால் தொடர்ச்சியாக நகரின் பல பகுதிகளில் இது போன்ற விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன.
எனவே, மாநகராட்சி நிர்வாகம் இது போன்ற விபத்தை தடுத்து நிறுத்துவதோடு குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை செய்து முடிக்காத ஒப்பந்த நிறுவனத்தை வெளியேற்ற முன்வர வேண்டும். மேலும் மகளை இழந்து வாடும் ஜெகஜோதி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ரூ.25 லட்சம் நஷ்டஈடும் வழங்க வேண்டும்.
உடனடியாக மேலசிந்தாமணி பகுதியில் சாலை அமைக்கும் பணியை செய்திட வேண்டும். மேலும் இதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள மாநக ராட்சி இளநிலை பொறியாளர் அலுவல கம் முற்றுகையிடும் போராட்டம் செவ் வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடை பெற உள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.