புதுக்கோட்டை, ஜூன் 12-
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளின் தாய்மார்களுக்கு மோட்டார் பொருத்திய தையல் எந்திரத்தை புதுக்கோட்டை ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா, தலைமை யில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 394 மனுக்களை பொது மக்கள் ஆட்சியரிடம் அளித்தனர். மனுக்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அறிவுசார் குறைபாடு டைய குழந்தைகளின் தாய்மார்கள் என மொத்தம் 4 பய னாளிகளுக்கு தலா ரூ.8,000 வீதம் ரூ.32,000 மதிப்புடைய மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை ஆட்சியர் வழங்கினார்.
மேலும், பொன்னமராவதி அரசு ஆதிதிரா விடர் நல மாணவர் விடுதி சமையலர் நா.ஆண்டி என்பவர் இறந்ததைத் தொடர்ந்து, அவரது மகன் ஆ.தங்கவேலு வுக்கு கருணை அடிப்படையில் சமையலர் பணியிடத்திற் கான தற்காலிக பணிநியமன ஆணையினையும் ஆட்சி யர் வழங்கினார்.