புதுக்கோட்டை, ஜூலை 31-
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாக மும், தமிழ்நாடு அறிவியல் இயக்க மும் இணைந்து 6-ஆவது புதுக் கோட்டை புத்தகத் திருவிழாவை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடத்தி வருகிறது. புத்தகத் திருவிழாவிற்கு வாசகர்களை, பொதுமக்களை ஈர்ப்பதற்காக விழாக்குழுவினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக பள்ளிக் கல்வித் துறை யின் சார்பில் மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களுக்கு அரசுப் போக்குவரத்துத் துறையின் வாகனத்திலும், தனியார் பள்ளிகளுக்கு சொந்த வாகனத்திலும் மாணவ, மாணவிகளை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக பள்ளி மாண வர்கள் புத்தகத் திருவிழாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். மாண வர்களுக்காக ஏற்பாடு செய்யப் பட்டுள்ள கோளரங்கை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். மேலும், மாண வர்களுக்காக ஏற்பாடு செய்யப் பட்டுள்ள அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் பங்கேற்பதோடு தங்களுக்குப் பிடித்தமான புத்த கங்களையும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.