தஞ்சாவூர், ஆக.27 -
தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலக கூட்ட அரங்கில், வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த வானவில் மன்ற கருத்தாளர்கள் 61 பேர் கலந்து கொண்டனர். பயிற்சியில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை மாவட்ட உதவி திட்ட இயக் குநர் ஆர்.ரமேஷ்குமார் சிறப்புரையாற்றினார். தமிழ் நாடு அறிவியல் இயக்க மாநில துணைத்தலைவர் பேராசிரியர் வெ.சுகுமாரன், மாவட்டச் செயலாளர் லெ.முருகன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில கருத்தாளர்கள் பயிற்சிகளை நடத்தினர்.