districts

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி துவக்கம்

கும்பகோணம், ஏப்.11- தமிழகத்தில் நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுக்கான பயிற்சிகளை பல்வேறு நிறு வனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தியும் கட்டண கொள்ளையிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் கும்பகோணம் கல்வி மாவட்டம் நாச்சியார்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் திங்களன்று கும்ப கோணம் மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் நா.ரவிச்சந்திரன், அரசு பள்ளி மாண வர்களுக்காக நீட் இலவச பயிற்சி மையத்தை தொடக்கி வைத்தார். பயிற்சியில் இயற்பியல், வேதியியல்,  தாவரவியல், விலங்கியல் பாடங்களுக் கான கருத்தாளர்கள் பள்ளிக் கல்வித் துறை  மூலம் நியமனம் செய்யப்பட்டு, அவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதோடு தேர்வுகளையும் நடத்தி,  நீட் தேர்வை சிறப்பாக எதிர்கொள்வதற்கும் நல்ல மதிப்பெண் பெறுவதற்கும் தயார்  செய்வதற்கான ஆயத்த கூட்டம் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆ.அல்லி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பள்ளி  தலைமை ஆசிரியர் அல்லி ஆகியோர் தெரி விக்கையில், “இப்பயிற்சி ஏப்ரல் 10  முதல் மே 6 ஆம் தேதி வரை தொடர்ச்சி யாக அரசு விடுமுறை நாட்கள் தவிர ஏனைய நாட்களில் நடைபெறும். பயிற்சி, நாச்சி யார்கோவில் அரசினர் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது” என்ற னர்.