மயிலாடுதுறை, அக்.29 - மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் வானகிரி கிராமத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த அக்.21 அன்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது இந்திய கடற்படை யினரால் தாக்குதலுக்கு உள்ளாகினர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர் களின் குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் ஆகி யோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, அவர்க ளின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண் டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் என்.எஸ்.நிஷா, சீர்காழி ஒன்றியக் குழுத் தலைவர் கமலஜோதி தேவேந் திரன், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா ஆகியோர் உடனிருந்தனர்.