தஞ்சாவூர், ஏப்.30-
உலக சிறுதானிய ஆண்டான 2023-இல் விவசாயிகள் சிறுதானியங்களை அதிகளவு சாகுபடி செய்து உலக மக்களுக்கு ஊட்டச் சத்தை அதிகமாக அளிக்க வேண்டும் என்று உழவர்களை வேளாண்துறை அறிவுறுத்தி யுள்ளது.
இதுகுறித்து வேளாண் இணை இயக்கு நர் நல்லமுத்து ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘அரிசி, கோதுமைக்கு மாற்றாக எதைச் சாப்பிடலாம் என்ற தேடலில் சர்வதேச அளவில் இன்று முன் நிற்பவை சிறுதானியங்கள்தான். இவற்றில் மிகுதி யான தாதுப்பொருட்கள், உயிர்ச்சத்து, நார்ச்சத்து, குறைந்த அளவு கொழுப்புச் சத்து அடங்கியிருப்பதால் இவை சிறந்த ஆரோக்கியத்திற்கான உணவாகக் கருதப்படுகிறது.
இந்த தானியங்களில் உள்ள உணவு சத்துக்கள், குறிப்பாக கால்சியம், இரும்புச் சத்து பிற உணவு தானியங்களைவிட அதிக மாக உள்ளது. இவை பெண்கள், வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் தன்மை உடையவை. அதிகளவு நார்ச்சத்து உள்ள தால் இவை சர்க்கரை வியாதி உள்ளவர் களுக்கு சிறந்த உணவாகும்.
மாற்றுப் பயிராக சிறுதானியங்களை பயிரிடுவதுதான் சிறந்தது. தமிழக அரசு வேளாண் உழவர் நலத் துறை மூலமாக பல்வேறு மானியத் திட்டங்களை அறிமுகப் படுத்தி வருகிறது. மாற்றுப் பயிராக சிறுதானி யங்களை சாகுபடி செய்து உலகுக்கு உணவு அளிப்பதோடு மட்டும் அல்லாமல் ஊட்டச்சத்தையும் அளித்திடுப்போம்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.