அரியலூர், மே 5-
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு அரசு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியினை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மாநில சிறுபான்மையினர் ஆணைய ஒருங்கி ணைப்பாளர் பேரா.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகி யோர் துவக்கி வைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நெல்லி யாண்டவர் கல்வி அறக்கட்டளை மற்றும் நேஷனல் கல்வி குழுமங்களின் நிறுவனத் தலைவர் சிலம்புசெல்வன், நேஷனல் கல்வி குழுமங்களின் செயலாளர் சங்கர நாராயணன், பேச்சுப்போட்டி மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் இராமராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.