திருச்சிராப்பள்ளி, மே 14-
திருச்சிராப்பள்ளியில் உணவுத் தெருவை உருவாக்குவதன் மூலம் கணிசமான வருமா னத்தை ஈட்ட நகராட்சி முயற்சி மேற்கொற் கிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் திருச்சிராப் பள்ளி மாநகராட்சியால், அண்ணாநகரில் உழ வர்சந்தை எதிரே மாநகராட்சிக்குச் சொந்த மான இடத்தில் உணவுத் தெரு அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் இதற்கான ஒரு வடிவமைப்பு உருவாக் கப்பட்டது. இருப்பினும், மக்கள் தேவைக் கேற்ப சில வசதிகளை மறுகட்டமைப்பு செய்யவேண்டியிருந்தது. தற்போது இப் பணிகள் இப் பணிகள் மே மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உழவர்சந்தை சாலை பிரதான சாலைக்கு அருகாமையில் உள்ள உள்பகுதியாகும். மாலை நேரத்தில் அண்ணா நகரில் உள்ள வாக்கர்ஸ் பகுதிக்கு ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர். எனவே, இங்குள்ள உணவுத் தெரு வாடிக்கையாளர்களை வெகு வாகக் கவரும். உணவுத் தெரு உட்புறச் சாலையில் அமைவதால் போக்குவரத்து நெரிசல் இருக்காது என்கின்றனர்.
உணவுத் தெருவில், பல்வேறு வகை யான உணவுகளை விற்கும் குறைந்தது 40 விற்பனையாளர்கள் தலா ரூ.10,000 வாட கைக்கு தங்கள் இடங்களை முன்பதிவு செய்ய தகுதியுடையவர்கள். ரூ. 3 கோடி செல வில் பார்க்கிங் இடங்கள் மற்றும் இருக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும் எனத் தகவல் கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அதிகாரிகள் கூறுகை யில், “உள்ளூர் சாலையோர விற்பனையா ளர்களை சுகாதாரமான சூழலில் மலிவு விலை யில் உணவு வழங்குவதை ஊக்குவிக்கும்.
இந்த உணவு வீதியில் சேகரமாகும் கழிவு களை அப்புறப்படுத்துவது ஒரு முக்கியமான பணி. உணவகங்கள் பொறுப்புடன் செயல் பட்டு கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த மாநகராட்சியோடு ஒத்துழைக்க வேண்டும். உணவு வீதியில் கடை நடத்துபவர்கள், நகரில் வேறு இடங்களில் தொழில் தொடங்காமல் இருக்க அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்கின்றனர் அதிகாரிகள்.
தில்லி மற்றும் பிற நகரங்களில் உள்ள உணவு தெருக்களைப் பார்த்த பின் திருச்சி ராப்பள்ளியிலும் இந்தத் திட்டத்தை செயல் படுத்தலாம் என முடிவு செய்ததாக மாநக ராட்சிப் பொறியாளர் ஒருவர் தெரிவித்தார்.