districts

img

தீயணைப்பு, மீட்பு பணிகள் நிலையம் திறப்பு விழா

மயிலாடுதுறை, ஏப்.12 - மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே யுள்ள காழியப்பநல்லூரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் திறப்பு விழா செவ்வாயன்று நடை பெற்றது. காழியப்பநல்லூர் ஊராட்சியில் ரூ.3 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட தீயணைப்பு மற்றும்  மீட்பு பணிகள் நிலையம் அலுவலர் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு வளாகம், கண்காணிப்பு நிலையம் ஆகிய கட்டிடங்களை தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் தலைமைச் செயல கத்திலிருந்து காணொலி காட்சி வாயி லாக திறந்து வைத்தார். காழியப்ப நல்லூர் ஊராட்சியில் கட்டப்பட்ட புதிய  தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய திறப்பு விழாவில், தரங்கம்பாடி வட்டாட்சியர் புனிதா, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி உதவி செயய் பொறியாளர் இளங்கோவன் ஆகியோர் துவக்கி வைத்து  மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

;