districts

பிஎம் கிசான் திட்டத்தில் நிதி உதவித் தொகை

திருச்சிராப்பள்ளி, ஜூன் 7-

     பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நிலம் உள்ள விவசாயி களுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 வேளாண் இடு பொருட்கள் வாங்கும் வகையில் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.  

    இதுவரை 13 தவணை தொகைகள் வழங்கப்பட்டு உள்ளன. விவசாயிகள் 14- ஆவது தவணை தொகையை பெறுவதற்கு கீழ்க்கண்ட விவரங்கள் அவசியமாக்கப் பட்டுள்ளது.  

    இ-கேஒய்சி பயனாளியின் சுய விவ ரத்தை பி.எம்.கிசான் வலைதளத்தில் பதிவு மற்றும் சரிபார்ப்பு செய்ய பொதுசேவை மையம் (அல்லது) அஞ்சலகவங்கிகள் (அல்லது) பி.எம்.கிசான் ஆண்ட்ராய்டு பேஸ் ரெககனைஷன் செயலி மூலமாக  சரிபார்த்து கொள்ளலாம். செயலியினை  கூகுள் பிளேஸ்டோரில் (google Play store) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    பி.எம்.கிசான் நிதியானது ஆதார் எண் அடிப்படையில் விடுவிக்கப்படுவதால் பய னாளிகள் தங்களது நடப்பில் உள்ள வங்கி  கணக்குடன் ஆதார் எண் இணைத்திருப் பதை வங்கியின் மூலமாக உறுதிப் படுத்திக் கொள்ளவும்.

    பி.எம்.கிசான் வழிகாட்டு நெறிமுறை களின்படி பயனாளிகளின் பெயரில் நிலம் இருத்தல் அவசியமாக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்களது நில உடைமை ஆவணங்களை இதுநாள் வரை  பதிவு செய்யாமல் இருப்பின் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங் களை அணுகி நிலவிவரங்களை பதிவு செய்யலாம்.

    இம்மூன்று செயல்களை முடிக்காத விவசாயிகளின் பெயர் விவரங்களை அரு கில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்  களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரி வித்துள்ளார்.