districts

img

இயற்கை சாகுபடி வயல்களில் கள ஆய்வு

திருவாரூர், டிச.26 - குடவாசல் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீ இயற்கை சாகுபடி வயல் களை நேரில் சென்று கள ஆய்வு செய்தார். திருவாரூர் மாவட்டம், அதம் பார்-1 பகுதியில் இயந்திர நடவு  முறையில் பசுந்தாள் உரம் மடக்கி  உழப்பட்டு, நடவு செய்யப்பட்டு களைக் கொல்லி பயன்படுத்தப் பட்ட வயல், வரப்பு உளுந்து சாகுபடி செய்யப் பட்டுள்ளது, நெம்மேலி கிராமத்தில் நேரடி  நெல் விதைப்பு செய்யப்பட்டு களைக் கொல்லி பயன்படுத்தப்பட்ட வயல், வெள்ளை அதம்பார் கிராமத்தில் நேரடி  நெல் விதைப்பு செய்த வயலில் களைக் கொல்லி பயன்படுத்தப்பட்டது, பிரதாப ராமபுரம் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்  வகைகள், பருத்தியூர் பகுதியில் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மஞ்சக்குடியில் அமைந் துள்ள சுவாமி தயானந்தா இயற்கை விவ சாய பண்ணையில், இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்படுவதை ஆட்சியர் தி.சாருஸ்ரீ, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகி யோர் பார்வையிட்டனர். நிகழ்வில், மஞ்சக்குடி சுவாமி தயா னந்தா கலை அறிவியல் கல்லூரியின் தாளா ளர் ஜி.சீனிவாசன் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர் ஏழுமலை, மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயலெட்சுமி, குடவாசல் வேளாண்மை அலுவலர் ஸ்ரீவெங்கடேஷ்வரன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.