பிப்.27 புதுகை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
புதுக்கோட்டை, பிப்.21:- புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப்ரவரி 27 ஆம் தேதி செவ்வாய்கிழமை காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். எனவே, விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள் மற்றும் மானியதிட்டங்கள் குறித்து தெரிந்துகொள்வதுடன் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்துக்குவிப்பு வழக்கு மார்ச் 22-க்கு மாற்றம்
புதுக்கோட்டை, பிப்.21- முன்னாள் அமைச்சர் சி.விஜய பாஸ்கர் மற்றும் அவரது மனைவி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசா ரணையை மார்ச்.22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். கடந்த அதிமுக ஆட்சியில் 2013 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் அதிமுக அமைச்சர வையில் சுகாதாரத்துறை அமைச்ச ராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். தற்போது விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர். கடந்த 2017-ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்த லில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா, குட்கா முறைகேடு உள்ளிட்ட குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை யினர் சோதனை மேற்கொண்டனர். 2016 முதல் 21 வரை வருமானத்தை விட அதிகமாக 27 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இவர்மீது வழக்குப் பதிவு செய்தனர். அவரது வீடு உள்ளிட்ட 56 இடங்களில் நடத்திய சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம் 4.87 கிலோ தங்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கில் கடந்த மே மாதம் 22-ஆம் தேதி புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நீதி மன்றத்தில் ஆஜராகி 216 பக்க குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ள னர். இதுவரை 11 முறை இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. 12-ஆவது முறையாக இந்த வழக்கு புதுக்கோட்டை புதுக் கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில், அந்த நீதிமன்ற நீதிபதி மாற்றுப் பணிக்கு சென்ற தால், வழக்கு புதுக்கோட்டை குடும்ப நல நீதிமன்ற நீதிபதியிடம் சென்றது. குற்றம் சாட்டப்பட்டுள்ள விஜயபாஸ்க ரோ அவரது மனைவி ரம்யாவோ நேரில் ஆஜராகாமல் அவர்களது வழக்கறி ஞர்களும் லஞ்ச ஒழிப்புத் துறையின ரும் ஆஜராகி இருந்த நிலையில், வழக்கு விசாரணையை வருகின்ற மார்ச் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.
தமிழ்ப் பல்கலை. தொலைநிலைக் கல்வித் தேர்வு எழுத இறுதி வாய்ப்பு
தஞ்சாவூர், பிப்.21 - தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில், 2008இல் இருந்து சேர்க்கை செய்யப் பெற்று, இதுவரை நடத்தப்பட்ட தேர்வுகளில் கலந்து கொள்ளாத அல்லது தேர்ச்சிப் பெறாமல் உள்ளவர்களுக்காக தேர்வு எழுத இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதுநிலை, இளநிலை, இளங்கல்வியியல், முதுநிலைப்பட்டயம், பட்டயம், சான்றிதழ், அறிமுக நிலை, தொடக்க நிலை, அடிப்படைநிலை ஆகிய மாணவர்களுக்கு அவர்களது கல்வித் தகுதியை நிறைவு செய்ய இறுதி வாய்ப்பினை உருவாக்குவதற்கு மே 2023 பருவ இறுதித் தேர்வினை, இணையவழியில் மே-2024 முதல் வாரத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணம், மற்றும் தேர்வுக்கால அட்டவணை ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும். மாணவர்கள் இந்த அரிய இறுதி வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு, தமிழ்ப் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் (பொ) தெரிவித்துள்ளார்.
அரியலூரில் இன்று மாபெரும் கடன் வசதியாக்க முகாம்
அரியலூர், பிப்.21- அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட ரங்கில், அனைத்துத் துறைகள் சார்பில் மாபெரும் கடன் வசதியாக்க முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்தது: தமிழக அரசு சுய வேலை வாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படை யில் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலனுக்காக வும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு துறைகளுடன் ஒருங்கி ணைந்து வங்கிகளின் ஒத்துழைப்போடு கடன் வசதியாக்க முகாமினை ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்த திட்ட மிட்டுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியரால், காசோலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. மேலும், இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் தங்களது பாஸ்போர்ட் அள விலான புகைப்படம்-2, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மாற்றுச்சான்றிதழ் (தகுதியிருப்பின்) ஆகியவற்றின் நகலினை, தங்களுக்கு ஆர்வமுள்ள துறைகளின் கீழ் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு அரியலூர், வாலாஜா நகரத்திலுள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது 04329}228555, 8925533925, 8925533926 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
தஞ்சையில் 9 வட்டங்களில் 30 புதிய தானியங்கி மழைமானி
தஞ்சாவூர், பிப்.21 - தமிழ்நாடு முழுவதும் காலநிலை மற்றும் மழையின் அளவை துல்லியமாக கண்காணித்திடும் பொருட்டு, 1,400 தானியங்கி மழைமானி நிலையங்கள் மற்றும் 100 தானி யங்கி வானிலை நிலையங்கள் அமைக்க அரசால் ஒப்பு தல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 9 வட்டங்க ளிலும், 30 புதிய தானியங்கி மழைமானி நிலையங்கள் மற்றும் 3 தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பிப்ரவரி 20 செவ்வாய்க்கிழ மை முதல் பணி துவங்கப்பட்டுள்ளது. இந்த தானியங்கி மழைமானி நிலையங்கள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்கள் நிறுவப்பட்டு ஓரிரு மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பணியிடம்
தஞ்சாவூர், பிப்.21 - தமிழ்நாடு அரசு சமூகப்பாதுகாப்பு துறையின் கீழ் மிஷன் வாட்சால்யா வழிகாட்டு நெறிமுறைகளின் படி, தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு செயல்பட்டு வருகின்றது. தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் சமூகப்பணியாளர் பதவிக்கு தகுதிவாய்ந்த நபர் தெரிவு செய்யப்பட உள்ளனர். இப்பதவிகளுக்கான விண்ணப்ப படிவம் மற்றும் விளக்கக் குறிப்புகள் https://thanjavur.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலு வலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அரசினர் குழந்தைகள் இல்ல வளாகம், வ.உ.சி,நகர், தஞ்சாவூர் 613007 (தொலைபேசி எண் 04362 237014) என்ற முகவரிக்கு 04.03.2024 தேதி மாலை 5.30 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைத்திடுமாறு மாவட்ட ஆட்சித்தலை வர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை தடையின்றி வழங்கிடுக! மாணவர் சங்க மாநாடு வலியுறுத்தல்
திருச்சிராப்பள்ளி, பில், 21, திருச்சி மாவட்டம் காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரியில் இந்திய மாணவர் சங்க கிளை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு கிளைத் தலைவர் ஆர்த்தி தலைமை தாங்கினார். துணைத் தலை வர் ஹரி வரவேற்றார். மாவட்டத் தலைவர் சூர்யா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவர் சிவ. வெங்கடேஷ் வாழ்த்திப் பேசினார்.சங்க மாநில தலைவர் சம்சீர் அகமது சிறப்புரை யாற்றினார். மாநாட்டில், மாணவர்கள் கல்லூரிக்கு எளிதில் வந்து செல்ல கல்லூரி நேரங்களில் கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்க வேண்டும், கல்லூரி க்கு முன்பு வாகனம் நிறுத்தம், சிக்னல் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். மாணவர்களு க்கு கல்வி உதவித்தொகை தடையின்றி அரசு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெ டுக்கப்பட்டனர். கிளைத்தலைவராக ஸ்ரீநாத், கிளைச்செயலாளலபக ஹரி, துணைத் தலைவர்களாக கண்ணா, சித்திக், யோகேஷ், துணைச் செயலாளர்களாக அஜய், விஷ்வா, அமரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளர் ஜி.கே.மோகன் நிறைவுரையாற்றினார்.