districts

img

அரசு கலைக்கல்லூரியை மாற்ற அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரதம்

போதிய இடவசதியின்றி ஜெயங்கொண்டத்தில் இயங்கி வரும் அரசு கலைக்கல்லூரியை உடையார்பாளையத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் மாற்ற அமைக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. போராட்டத்திற்கு உடையார்பாளையம் ஜமீன் ராஜ்குமார் சண்முகம் தலைமை வகித்தார். ஜமீன்தார் ராஜ்குமார் பழனியப்பன் தொடக்கி வைத்தார்.