திருச்சிராப்பள்ளி/புதுக்கோட்டை, நவ.19 - குடிநீருக்கும், விளைநிலங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் நில ஒருங்கி ணைப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் சார்பில் செவ்வாயன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் ராமகிருஷ்ணா பாலம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிபிஎம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கே.சி.பாண்டி யன், சிபிஐ தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி சிபிஎம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் முகமது அலி, மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன், புறநகர் மாவட்டச் செய லாளர் நடராஜன், மாவட்ட பொருளாளர் தனபால், மணிகண்டம் ஒன்றியச் செயலாளர் சிவக்குமார், காட்டூர் ஒன்றியச் செயலாளர் செந்தில், சிபிஐ தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் இந்திரஜித், மாவட்டச் செயலாளர் சிவசூரியன் ஆகி யோர் பேசினர். புதுக்கோட்டை புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாவட்டச் செயலாளர்கள் ஏ.ராமையன், த.செல்வராசு ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டத் தலைவர்கள் எஸ். பொன்னுச்சாமி, டி.அம்பலராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் சங்கத் தேசியக்குழு உறுப்பினர் மு.மாதவன், விதொச மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர் மற்றும் கே.திரு ஞானம், டி.சலோமி, எம்.பாலசுந்தர மூர்த்தி, த.அன்பழகன், வீரமணி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.