districts

பொன்மலை-மாவடி குளத்தை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, மே 27-

    திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் வெள்ளியன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

     கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநகர் மாவட்ட  தலைவர் கே.சி.பாண்டியன், மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த  மனுவில், ‘‘ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை ஊராட்சி கணலை முதல் பெருகமணி வரை நங்கம் கழிவு வாய்க்கா லின் கரையில் சாலை அமைக்க, சர்வேயர் அளந்து அத்துக் களை நாட்டி, 200 ஏக்கர் சாகுபடி நடைபெற உதவிட வேண்டும். கீழகல்கண்டார் கோட்டை - ஆலத்தூர் உய்யக் கொண்டான் ஆற்றிலிருந்து மயிலாகி குழுமி பிரிவு வாய்க்கால்  வரை தூர்வார வேண்டும். பொன்மலை - மாவடி குளத்தில் ஆகாய தாமரைகளை அகற்றி தூர்வார வேண்டும். மஞ்சத்திட லில் இருந்து ஆலத்தூர் செல்லும் வழியில் உய்யக்கொண் டான் வாய்க்கால் கரையில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும்.  காவிரி - குண்டாறு திட்டத்தில் கோரையாறு நேரடியாக இணைக் காமல் மூன்றரை கிலோமீட்டர் சுற்றி குன்றத்தூர் பீர்பேக்டரி வழியாக தொழிற்சாலை கழிவுநீர் கலப்பதற்கு ஏதுவாக 38  அடி உயரத்தில் கோரையாறு இணைக்கும் திட்டத்தை கைவிட  வேண்டும். திருவெறும்பூர் மலைக்கோவில் அடிவாரத்தில் குடியிருக்கும் 44 குடும்பங்களை காலி செய்ய முயற்சிக்கும் இந்து சமய அறநிலைத்துறையின் நடவடிக்கையை கைவிட வேண்டும்’’ என கூறியிருந்தார்.