தஞ்சாவூர், அக்.3 - திருச்சி மாவட்டம், வாழ வந்தான் கோட்டையில் இருந்து தண்ணீர் திறந்து இரண்டு மாதங்கள் கடந்தும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலிலும், உய்யக்கொண்டான் நீட்டி ப்பு வாய்க்காலிலும், பாச னத்திற்கு தண்ணீர் தராத தைக் கண்டித்தும், உடனடி யாக தொடர்ச்சியாக தண்ணீர் வழங்கி விவசாயி கள் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி யும், திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், செங்கிப்பட்டி கட்டளை மேட்டுக் கால்வாயில், புதிய கட்டளை மேட்டு வாய்க் கால், உய்யக்கொண்டான் மேட்டு வாய்க்கால் பாசன விவசாயிகள் சார்பில், விவ சாயிகள் தொடர் காத்தி ருப்பு போராட்டம், வியா ழக்கிழமை நடைபெற்றது. காத்திருப்பு போராட்டத் திற்கு தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டச் செய லாளர் என்.வி.கண்ணன் தலைமை வகித்தார். இதில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநிலச் செய லாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சி.பாஸ்கர், தமிழ ரசன், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நந்தகுமார், முன்னாள் ஒன்றியப் பெருந் தலைவர் திருஞானம், ஒன்றிய துணை பெருந்தலை வர் சுப்பு, வி.தொ.ச மாவட்ட நிர்வாகி வெ.ஜீவகுமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ராமச்சந்திரன் மற்றும் 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் வியாழக்கிழ மை காலை 11 மணி முதல் மாலை 6 மணியைக் கடந் தும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வருவாய்த் துறை, நீர்வள ஆதாரத்துறை அலுவலர்கள் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது நாளை வெள்ளிக்கிழமை தண்ணீர் திறந்து விடுவதாக உறுதி அளித்தனர். தண்ணீர் திறந்து விடும் வரை இந்த இடத்தை விட்டு அகலப் போ வதில்லை என விவசாயி கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை மாலை தண்ணீர் திறந்து விடா விட்டால் சனிக்கிழமை காலை திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டியில் சாலை மறியல் போராட்டம் நடை பெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தொ டர்ந்து காத்திருப்பு போரா ட்டம் நடந்து வருகிறது.