districts

வண்டிப் பாதையை அடைத்து வேலி அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு

அரியலூர், பிப்.12 - ஜெயங்கொண்டம் அருகே விவசாய நிலங்களுக்கு செல்லும் வண்டி பாதையை அடைத்து, அரசு  தடுப்பு வேலி அமைப்பதை கண் டித்து விவசாயிகள் திரண்டதால் பர பரப்பு ஏற்பட்டது.  அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே கோடாலிக் கருப்பூர் கிராமத்தில் அண்ணகாரன் பேட்டைக்கு செல்லும் சாலை அருகே பொன்னமுத்தான் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு அருகில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நஞ்சை  நிலங்கள் உள்ளன. இதில் நெற் பயிர்கள், உளுந்து பயிறு உள்ளிட்ட தானியங்களை விவசாயிகள் பயி ரிட்டு வருகின்றனர். இந்த விவசாய நிலங்களுக்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள  நத்தம் புறம்போக்கு நிலத்தை பிரதான வண்டிப் பாதையாக பல வருடங்களாக விவசாயிகள் பயன் படுத்தி வந்தனர். இந்நிலையில் அரசு  சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, விவசாய நிலங்களுக்கு செல்லும் வண்டிப் பாதையை அடைத்து தடுப்பு வேலி கட்டும் பணி களுக்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.  இதையறிந்த அப்பகுதி விவ சாயிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேலி அமைக்கும்  பணியை தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையில் தடுப்பு வேலி அமைத்தால், விவசாயிகள் கடு மையாக பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி வேலி அமைக்க முற்பட்ட வர்களுடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதையடுத்து தடுப்பு வேலி கட்டும் பணிகள் தற்காலி கமாக நிறுத்தி வைக்கப்பட்டன.  பின்னர் இதுகுறித்து விவசாயி கள் தெரிவிக்கையில், விவசாய நிலங்களுக்கு செல்லும் பிரதான வண்டி பாதையை அடைத்து தடுப்பு  வேலி அமைப்பதால் இப்பகுதியில் விவசாய பணிகள் கடுமையாக பாதிக் கப்படும். இதனால் சம்பா நெற் பயிர்கள் பயிரிட முடியாது. எனவே விவசாய நிலங்களுக்கு செல்லும் வண்டிப் பாதையை ஒதுக்கிவிட்டு, வேலி அமைக்கும் பணிகளை செய்ய வேண்டும். மேலும் அங்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்தனர்.  விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாமல் தடுப்பு வேலி அமைத்தால், அப்பகுதியில் விவசா யப் பணியில் ஈடுபடும் 500 ஏக்கர்  நிலப்பரப்புக்கான விவசாயிகளை யும் ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்து வோம் என தெரிவித்துள்ளனர்.