வழிப்பாட்டு தலங்கள், அறக்கட்டளைகள், மடங்கள் மற்றும் சத்திரங்களுக்கு சொந்தமான நிலங்களின் குத்தகை சாகுபடியாளர்களுக்கு நில உரிமைக் கோரி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கோயில் இடங்களில் குடியிருப்பவர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.