districts

img

பூலாம்பாடியில் உழவர் உற்பத்தியாளர் தினசரி காய்கறி சந்தை திறப்பு

பெரம்பலூர்,அக். 26-                                                      பெரம்பலூர் அருகே பூலாம்பாடியை சேர்ந்த மலேசிய தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் சார்பில் பூலாம்பாடியில் பிளஸ் மேக்ஸ் உழவர் உற்பத்தியாளர் தினசரி காய்கறி சந்தை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பிளஸ் மேக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்  டத்தோ பிரகதீஸ்குமார் தலைமை வகித்தார்.  மாவட்ட ஆட்சியர் கற்பகம், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி, சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட வன அலுவலர் குகனேஷ், ரோவர் வேளாண் கல்லூரி துணைத்தாளாளர் ஜான்அசோக் வரதராஜன், ஓய்வுபெற்ற டிஜிபி ரவி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்கச் செயலாளர் எ.கே. ராமசாமி வரவேற்றார். போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் காய்கறி சந்தை பெயர்ப்பலகையை திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் பேசுகையில், இந்த ஊர் வளர்ச்சி பெற வேண்டும், பிறந்த மண் பெருமை பெற வேண்டும் என்பதற்காக டத்தோ பிரகதீஸ்குமார் உழைத்துக் கொண்டி ருக்கிறார். என்றார். பிரகதீஸ்குமாருக்கு விவசாயிகள்,பொதுமக்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர். ஆலோசகர் விஐபி ராஜா நன்றி கூறினார்.  விழாவில் டத்தோ பிரகதீஸ்குமாரின் தந்தை சூரிய பிரகாசம், கோட்டாட்சியர் நிறைமதி, பிளஸ்மேக்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் நந்தினி பிரகதீஸ்குமார், மற்றும் பெருந்திரளான விவசாயிகள்  கலந்து கொண்டனர்.