பத்தனம்திட்டா, டிச.12- சபரிமலை தரிசனத் திற்கு வரும் பக்தர்களுக்கு அதிகபட்ச வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என முதல்வர் பினராயி விஜ யன் ஆலோசனை தெரி வித்துள்ளார். சபரிமலை பயணம் தொடர்பாக ஆலோ சிப்பதற்காக நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார். பக்தர்கள் சிரமமின்றி 18ஆம் படி ஏறி சன்னிதா னத்தை அடைந்து திருப்திகர மாக தரிசனம் செய்வது முக் கியம். அதற்குத் தேவை யான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று முதல்வர் பரிந்துரைத்தார். தரிசன நேரம் ஒரு நாளைக்கு 19 மணி நேரமாக அதிகரிக்கப் பட்டுள்ளதால், அதிகமா னோர் தரிசனம் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வாகனம் நிறுத்தும் இட வசதியை அதிகரிக்க தேவ சம்போர்டும், பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகமும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றார் முதல்வர். நிலக்கல்லில் வாகன நிறுத்தும் வசதி அதிகரிக்கப் பட்டுள்ளது. 17 மைதானங்க ளில் 6,500 வாகனங்கள் நிறுத்த முடியும். வாரம் ஒரு முறை தேவசம் துறை அமைச் சர் பங்கேற்கும் உயர்நிலைக் கூட்டம் மற்றும் ஆய்வு நடத்த வும் கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டது. கூட்டத்தில், தேவஸ்வம் துறை அமைச்சர் கே.ராதா கிருஷ்ணன், தேவசம் போர்டு தலைவர் கே.அனந்த கோபன், மாநில காவல் துறை தலைவர் அனில் காந்த், பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா எஸ்.ஐயர் மற்றும் தொடர்பு டைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.