districts

img

செம்பனார்கோவிலில் கண்-உறுப்புகள் தானம் விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை பிப்.01-  மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் கலைமகள் கல்வி நிறுவனங்கள் மற்றும் செம்ப னார்கோவில் கிங்ஸ் லயன்ஸ் சங்கம் சார்பில் கண்தானம், இரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தானம் விழிப்பு ணர்வு பேரணி  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார், செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், லயன்ஸ் சங்க மண்டல தலைவர் மதிவாணன், வட்டார தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன் விழிப்புணர்வு பேரணியை  தொடங்கி வைத்தார். இப்பேரணியில் 1500 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு காளகஸ்திநாதபுரம் கலைமகள் கல்லூரியில் இருந்து செம்பனார்கோவில் கலைமகள் பள்ளி வரை  விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக வந்தனர். இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் அமுர்த. விஜயகுமார், எம். அப்துல் மாலிக், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் முருகானந்தம், நவநீதன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.