districts

திருச்சி முக்கிய செய்திகள்

அரவைக் கொப்பரை தேங்காய்  கொள்முதல் செய்ய கால நீட்டிப்பு

திருவாரூர், செப்.3 - திருவாரூர் மாவட்டத்தில் நெல் பயி ருக்கு அடுத்தபடியாக உளுந்து, பச்சைப் பயறு மற்றும் பருத்தி பயிரிடப்படுகிறது. மேலும், தென்னை ஏறத்தாழ 5850 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக நெல் கொள்முதல் நடை பெறுவது போல், தற்போது டெல்டா மாவட்டங்களில் விலை ஆதரவு திட்டத் தின் கீழ் அரவைக் கொப்பரை தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்ட மைப்பு நிறுவனத்தின் மூலமாக மத்திய அர சால் குறைந்தபட்ச ஆதார விலையில் கொள் முதல் செய்யப்படுகிறது.  திருவாரூர் மாவட்டத்தில், திருத்துறைப் பூண்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஜனவரி 2022 முதல் தொடங்கி ஜூலை 2022 வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு இத்திட்டத்தை செப் டம்பர் 2022 (30.09.2022) வரை நீட்டித்து அனு மதி வழங்கியுள்ளது. அதன்படி, திருத்து றைப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலமாக அரவைக் கொப்பரை அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.105.90 என கொள்முதல் செய்யப்படவுள்ளது. கொள் முதலுக்கு கொண்டு வரப்படும் அரவைக் கொப்பரை ஈரப்பதம் 6 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் எனவும், விற்பனைக் குழு அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நில சிட்டா,  அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கி  கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களு டன் திருத்துறைப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து தங்களது அரவைக் கொப்ப ரையை விற்பனை செய்யலாம்.  இதற்கான பணம் நேரடியாக விவசாயி களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.  மேலும் விவரங்களுக்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆரோக் கியராஜ் (9500787325), இளநிலை உதவியா ளர் ரஜினிகாந்த் (9751382820), அலுவலக உதவியாளர் குமரன் (8508261175) என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள லாம்.

வாக்காளர் பட்டியலுடன்  ஆதார் எண் இணைக்க இன்று சிறப்பு முகாம் 

திருச்சிராப்பள்ளி, செப்.3 - திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது  சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர்களி டமிருந்து தன் விருப்பத்தின்படி ஆதார் எண் விபரங்கள் பெறப்பட்டு வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு  பகுதியாக ஞாயிற்றுக்கிழமை (செப்.4) திருச்சி  மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார்  இணைப்பு சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இச்சிறப்பு முகாம் அன்று வாக்காளர்கள் தனது சுயவிருப்பத்தின் அடிப்படையில் தங்கள் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்திற்குச் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம் 6ஏ-வை பெற்று தங்களது ஆதார் எண் விபரங்களை தெரிவித்து வாக்கா ளர் பட்டியலுடன் தங்களது ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.  மேலும் இணைய வழிமுறையில் வாக்கா ளர்கள் தாங்களே நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் https://www.nvsp.in, https://votersportal.eci.gov.in  ஆகிய இணையதளம் மூலமாகவும் Voters Helpline Mobile App, GARUDA mobile App போன்ற செயலி வழியாகவும் இணைத்துக் கொள்ளலாம். மேலும் தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவி னர்கள் ஆகியோரிடம் இத்திட்டம் குறித்தும், சிறப்பு முகாம் குறித்தும் தெரியப்படுத்தி பயன்பெற  வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

இடைக்குழு உறுப்பினர்களுக்கு அரசியல் பயிற்சி முகாம்

திருச்சிராப்பள்ளி, செப்.3 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்ட இடைக்குழு உறுப்பினர்களுக்கான அரசியல் பயிற்சி முகாம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்கள் புளியஞ்சோலையில் நடைபெறுகிறது. முதல் நாள் நடைபெற்ற முகாமிற்கு மாவட்டக்குழு உறுப்பினர் குமார் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் வரவேற் றார். தமிழக சீர்திருத்த இயக்கம் என்ற தலைப்பில் மாநில செயற்குழு  உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், ஆர்எஸ்எஸ் அபாயம் என்ற தலைப்பில் அன்வர் உசேன், இடைக்குழு செயல்பாடுகள் என்ற தலைப் பில் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், வர்க்க வெகுஜனங் களை திரட்டுவோம் என்ற தலைப்பில் புறநகர் மாவட்ட செயலாளர் ஜெய சீலன் ஆகியோர் பேசினர். கட்சியின் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை நிறைவுரையாற்றினார். இதில் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு, இடைக்குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். 

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை  வழங்கும் முகாம் 

தஞ்சாவூர், செப்.3 -  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஆல டிக்குமுளை ஊராட்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது.  ஊராட்சி மன்றத் தலைவர் சூர்யா புகழேந்தி தலைமை வகித் தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன், சமூக  நலத்துறை தனி வட்டாட்சியர் சுசீலா, பள்ளி வளர்ச்சி குழு செயலா ளர் புகழேந்தி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இளங்கோ  மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட னர். இதில் 25 பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும், மத்திய அரசின் மகத்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு 49 பேருக்கு பதிவு செய்யப்பட்டது. சமூக நலத்துறை மூலமாக 15 பேர்  உதவித்தொகை பெற பெயர்கள் பதிவு செய்யப்பட்டது. 

‘நம்ம ஊரு சூப்பரு’  விழிப்புணர்வு நிகழ்ச்சி

முசிறி, செப்.3 - திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் அருகே மணமேடு கிரா மத்தில் ‘நம்ம ஊரு சூப்பரு’ திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழு வினர் வாயிலாக வீடு வீடாகச் சென்று மக்களிடமிருந்து மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தனித்தனியே தரம் பிரித்து வாங்கி  விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் ம.பிரதீப்  குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் முசிறி சட்டமன்ற உறுப்பி னர் காடுவெட்டி ந.தியாகராஜன், மகளிர் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கங்காதாரணி, ஊராட்சித்  தலைவர் தண்டபாணி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள், வளர்ச்சித் துறை அலுவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.

தென்னங்கன்றுகள் நடப்பட்டன 

தஞ்சாவூர், செப்.3 -  உலக தென்னை தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில்,  பழைய பேராவூரணியில் உள்ள குளக்கரையைச் சுற்றி, 50 தென்னங் கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, லயன்ஸ் சங்கத்  தலைவர் எஸ்.பாண்டியராஜன் தலைமை வகித்தார். செயலாளர் எம்.எஸ்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.  சங்கத்தின் சாசன  உறுப்பினர் ரமேஷ் வழங்கிய 50 தென்னங்கன்றுகள் குளக்கரை யைச் சுற்றிலும் நடப்பட்டன. 

பட்டாசு கடை வைக்க  விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சிராப்பள்ளி, செப்.3 -  24.10.2022 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் புதிய தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக் கொள்ள தற்காலிக உரிமம் கோரும் விண்ணப்பதாரர்கள் 1.9.2022 முதல் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் பெறலாம். இதற்கு இணையதளம் மூலம் வெடி மருந்து சட்டம் 1884 மற்றும் வெடிமருந்து விதிகள் 2008-க்கு உட்பட்டு,  உரிய ஆவணங்களுடன் 30.9.2022-க்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். 30.9.2022-க்கு பின்னர் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மரக்கன்றுகள்  நட்டு பராமரிக்கும் திட்டம் தமிழ்ப் பல்கலை.யில் தொடக்கம்

தஞ்சாவூர், செப்.3-  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பயிலும், ஒவ்வொரு மாண வரும், ஒரு மரக்கன்று நட்டு பராமரிக்கும் திட்டப்பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப் பணித் திட்டச் சிறப்பு முகாம் செப்.2 அன்று தொடங்கி, செப்.8 வரை 7 நாட்களுக்கு நடைபெறு கிறது. இச்சிறப்பு முகாமின் தொடக்க நிகழ்வில், தமிழ்ப் பல்கலைக் கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் மரக்கன்று நட்டு நிகழ்ச்சி யைத் தொடங்கி வைத்தார். முகாமில், ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு  மரம் என்ற வகையில் அனைத்து மாணவர்களையும் கொண்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. இத்திட்டத்தில் 2000 மரக்கன்றுகள் நடப் படவுள்ளன.   தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் படிக்கக்கூடிய அனைத்து மாண வர்களும் தங்களின் படிப்புக் காலம் முடியும் வரை மரக்கன்றுகளைப் பேணி பாதுகாக்க வேண்டும். மாணவர்களால் நடப்படுகின்ற மரக்  கன்றுகளுக்கு அவர்களின் பெயர்கள் சூட்டப்படும் என துணை வேந்தர் தெரிவித்தார்.

பி.எம். கிசான் திட்டத்தில்  கூடுதல் விவரங்களை சேர்க்க வேண்டும்

திருவாரூர், செப்.3 - விவசாயிகள் இடுபொருட்கள் வாங்குவதற்காக 2019 முதல் பி.எம்.கிசான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், அனைத்து விவசாயிகளுக்கும் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப் பட்டு வந்தது. இத்திட்டத்தில் இதுவரை 11 தவணைகள் பணம் வரவு வைக்கப் பட்டுள்ளது. விவசாயிகள் நடப்பு 12-வது தவணைத் தொகை பெறுவதற்கு  அரசு சில வழிமுறைகளை தெரிவித்துள்ளது. விவசாயிகள் ஆதார் எண்ணு டன் தொலைபேசி எண்ணை இணைத்து, அத்துடன் நில உரிமை பட்டா, வங்கி கணக்கு விபரங்களை பி.எம்.கிசான் வலைதளத்தில் 10.9.2022 ஆம்  தேதிக்குள் பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சி யர் ப.காயத்ரி கிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு கும்பகோணம் நகரில் குடிநீர்  விநியோக பணிகள் பாதிப்பு

கும்பகோணம்,  செப்.3 - கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பகோணம் மாநகராட்சிக்கு சொந்தமான குடிதாங்கி தலைமை நீரேற்று நிலைய குடிநீர் கிணறுகள் முழுவதுமாக மூழ்கிவிட்டன. இதனால் மின் மோட்டார்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட மக்கள் தங்களுக்கு வழங்கப்படும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  மேலும், இயல்பு நிலை திரும்பும் வரை குடிநீர் வழங்கும் நேரத்தில் தாமதங்கள் ஏற்படக்கூடும். வெள்ளப் பெருக்கு முடிந்தவுடன் போர்க்கால அடிப்படையில் சீரான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.