districts

img

ரூ.537.27 கோடி புதிய தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம்

புதுக்கோட்டை, நவ.21 - புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.537.27 கோடி மதிப்பில் புதிய  சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் திங்கள் கிழமை நடைபெற்ற தொழில் முத லீட்டுக் கருத்தரங்கில் பரிமாறிக் கொள்ளப்பட்டன. சென்னையில் ஜனவரி 7, 8 தேதி களில் நடைபெறவுள்ள உலகத் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி, புதுக் கோட்டை மாவட்டத் தொழில் மையம் சார்பில் தொழில் முத லீட்டுக் கருத்தரங்கு திங்கள்கிழமை  நடைபெற்றது. இதில், புதுக் கோட்டை மாவட்டத்தில் ரூ.500 கோடிக்கு தொழில் முதலீட்டு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, ரூ. 537 கோடிக்கு புரிந்துணர்வு ஒப் பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. அமைச்சர் ரகுபதி கருத்தரங்கில் மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசு கையில், “இலக்கைத் தாண்டி ரூ.37 கோடிக்கு முதலீடுகள் ஏற்பட்டி ருந்தாலும், இன்னமும் கூடுதலாக தொழில் முதலீடுகளை உருவாக்க வேண்டும். அதற்கான அத்தனை உதவிகளையும் அரசின் சார்பில் செய்து கொடுக்க தயாராக இருக் கிறோம்.  சுற்றுலாத் தலங்களை மேம் படுத்தினால் அந்தத் துறை சார்ந்த  தொழில்களை உருவாக்க முடியும் என்ற கோரிக்கையை ஏற்கிறோம். அதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்வோம். அதேபோல, தமிழ் நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தின் அலுவலகத்தை மீண்டும் புதுக் கோட்டையில் கொண்டு வரு வதற்கான நடவடிக்கை எடுக்கப் படும்” என்றார். அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசுகையில், “தொழில்களைத் தொடங்குவதற்கு தேவையான அனைத்து உரிமங்களும் விரை வாக வழங்கப்படுகின்றன. அதே போல, புதுப்பித்தலுக்கும் கூடுதல்  காலக்கெடு வழங்கப்பட்டிருக் கிறது. ஹைட்ரோ கார்பன் உள் ளிட்ட சுற்றுச்சூழலைப் பாதிக்கக் கூடிய எந்த அனுமதியையும் தமிழ் நாடு அரசு வழங்காது” என்றார். கருத்தரங்கில் மாவட்ட ஆட்சி யர் ஐ.சா. மெர்சி ரம்யா தலைமை  வகித்துப் பேசினார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் மா.சின்னதுரை (கந்தர்வகோட்டை), வை.முத்து ராஜா (புதுக்கோட்டை), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெய லட்சுமி ஆகியோர் பேசினர். புதுக்கோட்டை மாவட்ட சிறு,  குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நலச் சங்கத்தின் தலைவர் எஸ்.  ராஜகுமார் உள்ளிட்டோர் தங்களது  கோரிக்கைகள் குறித்துப் பேசினர்.