districts

தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தேர்வுநிலை பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் சுய உதவிக்குழுவினை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு வீட்டுக்கு வீடு மக்கும் குப்பை, மக்காத குப்பை சேகரிக்கும் தள்ளுவண்டிகள் வழங்கும் விழா பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல் தலைமை வகித்தார். நிவேதா முருகன், எம்.எல்.ஏ. தூய்மை பணியாளர்களுக்கு வீட்டுக்கு வீடு குப்பை சேகரிக்கும் 10 தள்ளுவண்டிகளை  வழங்கி சிறப்புரையாற்றினார்.