கரூர்,ஜன.5- தமிழ்நாடு காது கேளாதோர் வாய் பேசாதோர் மாற்றுத்திறனாளிகள் சங்கத் தின் கரூர் மாவட்டக்குழு சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. சங்க அலுவலகம் முன்பு நடைபெற்ற விழாவிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கவீன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அரவிந்த் வரவேற்று பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாநகர செயலாளர் எம்.தண்டபாணி, தீக்கதிர் மாவட்ட நிருபர் சி.செல்லதுரை, செட்டிநாடு சிமெண்ட் சிஐடியு சங்க தலை வர் பெரியசாமி ஆகியோர் கலந்து பேசினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொங்கல் விழாவில் ஓட்ட பந்தயம், இசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு விளை யாட்டுப் போட்டிகளில் காது கேளாதோர், வாய் பேசாதோர் குழந்தைகள், மகளிர், ஆண்கள் என குடும்பத்துடன் கலந்து கொண்டு விளையாடினர். வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.