districts

img

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

அரியலூர், மார்ச் 13- அரியலூரில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, ஒன்றிய அரசின் சூழல் வனம் காலநிலை மாற்றம் துறை, தேசிய பசுமைப் படை சார்பில் சுற்றுச்சூழல் பாது காப்பு குறித்த தெருமுனைப் பிரச்சாரம் புதன்கிழமை யன்று தொடங்கப்பட்டது. அரியலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு , மாவட்ட வன அலுவலர் த.இளங்கோவன் தலைமை வகித்து, பிரச்சாரத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.  நாகப்பட்டினம் யாழிசை கிராமிய தப்பாட்டக் கலைக் குழுவினர் அரியலூர் நகரின் பிரதான பகுதிகளில் பொம்மலாட்டம், தெருக்கூத்து, போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் பொது இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்..